மகிந்தவை நேரில் சென்று பார்வையிட்ட முன்னாள் அமைச்சர்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நலம் குறித்து விசாரிக்க முன்னாள் அமைச்சர் மகிந்த அமரவீர, தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்குச் சென்றுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச செப்டம்பர் 11 ஆம் திகதி விஜேராமவில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறியிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்கும் மசோதா சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தது.

பலர் சந்திப்பு
இவ்வாறு முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்கும் மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்பில் உள்ள விஜேராம மாவத்தையில் உள்ள அரச பங்களாவிலிருந்து வெளியேறி ஹம்பாந்தோட்டையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் தங்கியுள்ளார்.

அன்றிலிருந்து, அரசியல்வாதிகள், முன்னாள் ஜனாதிபதி, பொது மக்கள் என பலரும் அவரை நேரில் சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |