மகளை பிரிந்திருக்க முடியாது நாடு திரும்பும் மஹேல ஜயவர்தன
இலங்கை கிரிக்கட் அணியின் ஆலோசகராக கடமையாற்றிய மஹேல ஜயவர்தன(Mahela Jayawardena) நாடு திரும்புவதாக அறிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்பொழுது நடைபெற்று வரும் டுவன்ரி20 உலகக் போட்டித் தொடரின் இலங்கை அணியின் ஆலோசகராக மஹேல கடமையாற்றி வருகின்றார்.
இந்த நிலையில் நீண்ட நாட்கள் உயிர்குமிழி (bio-bubble)ல் தனித்திருந்து களைப்படைந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த 145 நாட்களாக உயிர்குமிழி முறையில் தனித்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இன்றைய தினம் நடைபெறும் முதல் சுற்றுப் போட்டியுடன் தாம் நாடு திரும்புவதாக மஹேல தெரிவித்துள்ளார்.
நீண்ட காலம் மகளை பிரிந்திருந்த காரணத்தினால் தாம் நாடு திரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அணியுடன் இணைந்திருக்கப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.





வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam
