மகளை பிரிந்திருக்க முடியாது நாடு திரும்பும் மஹேல ஜயவர்தன
இலங்கை கிரிக்கட் அணியின் ஆலோசகராக கடமையாற்றிய மஹேல ஜயவர்தன(Mahela Jayawardena) நாடு திரும்புவதாக அறிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்பொழுது நடைபெற்று வரும் டுவன்ரி20 உலகக் போட்டித் தொடரின் இலங்கை அணியின் ஆலோசகராக மஹேல கடமையாற்றி வருகின்றார்.
இந்த நிலையில் நீண்ட நாட்கள் உயிர்குமிழி (bio-bubble)ல் தனித்திருந்து களைப்படைந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த 145 நாட்களாக உயிர்குமிழி முறையில் தனித்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இன்றைய தினம் நடைபெறும் முதல் சுற்றுப் போட்டியுடன் தாம் நாடு திரும்புவதாக மஹேல தெரிவித்துள்ளார்.
நீண்ட காலம் மகளை பிரிந்திருந்த காரணத்தினால் தாம் நாடு திரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அணியுடன் இணைந்திருக்கப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
மயில் செய்த வேலையால் மொத்தமாக ஜெயில் அனுப்பப்பட்ட பாண்டியன் குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam