மகளை பிரிந்திருக்க முடியாது நாடு திரும்பும் மஹேல ஜயவர்தன
இலங்கை கிரிக்கட் அணியின் ஆலோசகராக கடமையாற்றிய மஹேல ஜயவர்தன(Mahela Jayawardena) நாடு திரும்புவதாக அறிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்பொழுது நடைபெற்று வரும் டுவன்ரி20 உலகக் போட்டித் தொடரின் இலங்கை அணியின் ஆலோசகராக மஹேல கடமையாற்றி வருகின்றார்.
இந்த நிலையில் நீண்ட நாட்கள் உயிர்குமிழி (bio-bubble)ல் தனித்திருந்து களைப்படைந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த 145 நாட்களாக உயிர்குமிழி முறையில் தனித்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இன்றைய தினம் நடைபெறும் முதல் சுற்றுப் போட்டியுடன் தாம் நாடு திரும்புவதாக மஹேல தெரிவித்துள்ளார்.
நீண்ட காலம் மகளை பிரிந்திருந்த காரணத்தினால் தாம் நாடு திரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அணியுடன் இணைந்திருக்கப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan