மட்டக்களப்பில் விஷ்ணு மகா வித்தியாலய சாதனையாளர் பாராட்டு விழா
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட காக்காச்சிவட்டை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் காக்காச்சிவட்டை கிராமத்திலுள்ள அன்னையின் கரங்கள் எனும் அமைப்பின் ஒழுங்கமைப்பில் சாதனையாளர் பாராட்டு விழா இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது, நேற்றைய தினம் பிற்பகல் (29.02.2024) வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் வித்தியாலய அதிபர் வேகுணாளன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிப்பு
இதன்போது, ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தோர், கல்வி பொதுத்தர சாதாரண தரம் மற்றும் உயர் தரத்தில் சித்தியடைந்தோர், பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டோர், கல்வியற் கல்விக்கு தெரிவு செய்யப்பட்டோர் போன்ற மாணவர்களுக்கு பதக்கங்களும், நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், காக்காச்சி வட்டைக் கிராமத்திலிருந்து பல சமூக சேவைகளை மேற்கொண்டு வரும் அன்னையின் கரங்கள் எனும் அமைப்பின் அனுசரணையினை நடைபெற்ற இந்நிகழ்வில் பட்டிருப்புக் கல்வி வலயத்தின் உதவிக்கல்வி பணிப்பாளர், போரதீவுப்பற்று கோட்டக்கல்வி பணிப்பாளர், மற்றும் ஆலயக்குருமார் கிராம பொது அமைப்புக்களின் பிரிதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்தி : வ.சக்திவேல்






புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 8 மணி நேரம் முன்

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri
