பூண்டுலோயா கயப்புக்கலை பகுதியில் சீரடி சாய்பாபா சிலைக்கு மஹா கும்பாபிஷேகம்
நுவரெலியா மாவட்டம் பூண்டுலோயா கயபுக்கலை கீழ் பிரிவு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய சீரடி சாய்பாபா பிரதிஷ்ட மஹா கும்பாபிஷேகம் மிக சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
இதன்போது, காலை விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பிக்கப்பட்டு புண்ணியாகவாஜனம் மற்றும் விசேட யாக பூஜை இடம்பெற்று ஸ்ரீ சீரடி சாய்பாபா உருவசிலைக்கு கண் திறக்கப்பட்டு மஹா கும்பாபிஷேகம் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து, விசேட பூஜைகள் இடம்பெற்றதோடு மகேஸ்வர பூஜையுடன் அடியவர்களுக்கு அன்னதானமும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
ஏராளமான பக்தர்கள்
இதன்போது, நுவரெலியா மாவட்டம் பூண்டுலோயா பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |