எரிபொருள் விலை அதிகரிப்பின் பின்னணியில் மாபியா கும்பல்! சுகீஸ்வர பண்டார விமர்சனம்
நாட்டில் தற்போதைக்கு நடைமுறையில் உள்ள எரிபொருள் விலை அதிகரிப்பின் பின்னணியில் 'பெலவத்தை' மாபியா கும்பல் செயற்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக சுகீஸ்வர பண்டார விமர்சித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் செயலாளரும், நவஜனதா பெரமுண கட்சியின் தலைவருமான சுகீஸ்வர பண்டார , கூட்டு எதிர்க்கட்சி சார்பில் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு குறித்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்ட இரகசிய ஆயுதக்கிடங்கு! இளம் தம்பதியினர் தலைமறைவு - அவசர உதவிகோரும் பொலிஸார்
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்து, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகள் தங்களது உள்நாட்டு எரிபொருள் விலையைக் குறைத்துள்ள போதிலும், இலங்கையில் நிறுவனங்களின் மாஃபியாக்கள் மற்றும் ஊழல்கள் காரணமாகவே எரிபொருள் விலை குறைக்கப்படாமல் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் கடந்த எட்டு மாத காலத்திற்குள் பல 'கின்னஸ் சாதனைகளை' படைத்துள்ளது.
இலங்கைக்கு தரமற்ற மற்றும் சாம்பல் நிறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்தமை, அதிக விலைக்கு எரிபொருளைக் கொள்வனவு செய்தமை மற்றும் மின்வெட்டை முகாமைத்துவம் செய்ய முற்பட்டபோது ஏற்பட்ட பில்லியன் கணக்கான டொலர் நஷ்டத்தை ஈடுசெய்யவே அரசாங்கம் தற்போது எரிபொருள் விலையைக் குறைக்காமல் அதிகரித்துள்ளது.
தெற்காசியாவிலேயே அதிக விலைக்கு எரிபொருளை விற்கும் நாடாக இலங்கை மாறியுள்ளது. கடந்த பெப்ரவரி 28 முதல் மே 31 வரையான காலப்பகுதியில் உலகிலேயே அதிக சதவீதத்தால் டீசல் மற்றும் பெட்ரோல் விலையை அதிகரித்த நாடாக இலங்கை பதிவாகியுள்ளது.
அதன்படி, இலங்கையில் டீசல் விலை 38.9 வீதமாகவும், பெட்ரோல் விலை 27.6 வீதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஈரான் - இஸ்ரேல் யுத்தம் காரணமாகவே விலை அதிகரிக்கப்பட்டதாக அரசாங்கம் கூறுவது முற்றிலும் பொய்யானதாகும்.
தனியார் நிறுவனங்களிடமிருந்து சட்டவிரோத தரகுப்பணம்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இரு வாரங்களுக்கு முன்னர் நாட்டில் இரு வாரங்களுக்குரிய எரிபொருளே உள்ளதாகக் கூறியிருந்தார். அப்போது உலக சந்தையில் கச்சா எண்ணெய் பெரல் 94 டொலராக இருந்தது.
தற்போது விலை மேலும் குறைந்துள்ள நிலையிலும் உள்நாட்டில் விலையை அதிகரிப்பது தற்போதைய அரசாங்கத்திற்கும் அதன் எரிசக்தி அமைச்சருக்கும் விலை கட்டுப்பாடு குறித்து எந்தவொரு முறையான புரிதலும் இல்லை என்பதையே காட்டுகிறது.

அத்துடன், அன்று கஞ்சனவின் கணக்கிற்கு தரகுப்பணம் செல்வதாகக் கூறியவர்கள், இன்று இந்த தனியார் நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் சட்டவிரோத தரகுப்பணம் தற்போது 'பெலவத்தைக்கு' செல்வது குறித்து மௌனம் காப்பது ஏன்?
இந்த தரகுப் பணம் யாருக்குச் செல்கிறது என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் தொடர்ந்து விமர்சித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஜனதா சேவக கட்சியின் தலைவர் ஜகத் விஜேசேகர மற்றும் லங்கா சமசமாஜ கட்சியின் கொழும்பு மாவட்ட தலைவர் பேஷல செனசிங்க ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
அரச வங்கி ATM இயந்திரத்திற்கு கொண்டுவரப்பட்ட கோடிக்கணக்கான பணம் கொள்ளை - CCTV குறித்து வெளியான தகவல்