மத்திய கிழக்கில் பதற்றம்: வளைகுடா நாடுகளுக்கான சரக்கு முன்பதிவுகளை நிறுத்தியது 'மெர்ஸ்க்' நிறுவனம்
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் நிலையற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு, உலகின் முன்னணி கப்பல் போக்குவரத்து நிறுவனமான மெர்ஸ்க் , பல வளைகுடா நாடுகளுக்கான சரக்கு முன்பதிவுகளை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் (UAE), ஓமன் (சலாலா துறைமுகம் தவிர), ஈராக், குவைத், கட்டார், பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபியாவின் தம்மாம் மற்றும் ஜுபைல் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் அனைத்து சரக்கு முன்பதிவுகளும் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஊழியர்களின் பாதுகாப்பு
மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய அபாயகரமான சூழலை ஆய்வு செய்த பிறகு, தங்கள் ஊழியர்களின் பாதுகாப்பு, சரக்குகளின் பாதுகாப்பு மற்றும் கப்பல் போக்குவரத்து வலையமைப்பின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் நோக்கிலேயே இந்த கடினமான முடிவை எடுத்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தத் தற்காலிகத் தடையானது சர்வதேச வர்த்தகத்தில், குறிப்பாக எரிசக்தி மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகச் சங்கிலியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க தாக்குதலில் மூழ்கிய ஈரானிய கப்பல் : இதுவரை 84 பேரின் உடல்கள் மீட்பு - தொடரும் தேடுதல் நடவடிக்கை
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
காமெனியின் படுகொலை... உலகம் மொத்தம் பீதியை ஏற்படுத்திய ஈரானிய மூத்த மதகுருவின் அழைப்பு News Lankasri