சட்டத்தரணிகள் சம்மேளனத்தின் தேர்தல்: புதிய தலைவர் பதவிக்கு மும்முனைப் போட்டி
2025 - 2026ஆம் ஆண்டு வரையான கால பகுதிக்கான, இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனத்துக்கான தலைவர் பதவிக்காக வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த தலைவர் பதவிக்கான தேர்தலானது, 2025 பெப்ரவரி 19ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.
வேட்புமனு சமர்ப்பிப்பு
இந்நிலையில், இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனத்தின் தலைவர் அனுர மெத்தேகொட, சம்மேளனத்தின் முன்னாள் செயலாளர்களான ராஜீவ் அமரசூரிய மற்றும் சுனில் அபேயரத்ன ஆகியோர் வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ளனர்.

அதேநேரத்தில் சட்டத்தரணி சதுர கல்ஹேனவும், சம்மேளனத்தின் செயலாளர் பதவியை இரண்டாவது முறையாக தொடரும் வகையில் தமது வேட்புமனுவை சமர்ப்பித்தார்.
போட்டியின்மையால், 2025 - 2026 காலத்திற்காக, சம்மேளனத்தின் செயலாளராக சட்டத்தரணி சதுர கல்ஹேன போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கடை திறக்க போராடும் ஜனனி, ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த நடிகை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri
பல்லவன் யார் என்ற பல வருட ரகசியத்தை கூறிய நடேசன், ஷாக்கில் நிலா... அய்யனார் துணை எமோஷ்னல் எபிசோட் Cineulagam