வடக்கு - கிழக்கில் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல்
மட்டக்களப்பு மாவட்டம் அம்பிளாந்துறை கிராமத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை (24.11.2028) மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
முன்னாள் போராளி குகதாசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அம்பிளாந்துறை கிராமத்தைச் சேர்ந்த மாவீரர்களின் பெற்றோர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.
முல்லைத்தீவு மாவட்டம்
மாவீரர் தினத்தினை முன்னிட்டு மாவீரர் பெற்றோர்கள் உரித்துடையோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு பிரதேசங்கள் ரீதியாக நடைபெற்று வருகின்றது.
அந்தவகையில் நேற்றையதினம் (23.11.2025) முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு புத்தடி விநாயகர் ஆலயத்திற்கு அருகாமை பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் விசுவமடு மேற்கு, கிழக்கு பகுதிகளை சேர்ந்த மாவீரர் பெற்றோர்கள் உரித்துடையவர்கள் மதிப்பளிக்கப்பட்டுள்ளார்கள்.

விசுவமடு பிரதேசத்தினை சேர்ந்த மாவீரர் பெற்றோர்கள் மாலை அணிவிக்கப்பட்டு மங்கள வாத்திய இசையுடன் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்திற்கு அழைத்து வரப்பட்டு பொதுச்சுடரினை மூன்று மாவீரர்களின் சகோதரி புஷ்பராணி ஏற்றி வைத்ததனை தொடர்ந்து மாவீரர்களின் பொது படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு மாவீரர் பெற்றோர்கள் மதிப்பளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
வவுனியா
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்றது.

வவுனியா மாநகரசபை கலாசார மண்டபத்தில் இன்று (24.11) காலை இந்நிகழ்வு இடம்பெற்றது.
வவுனியா மாநகரசபை முன்றலில் இருந்து மேளதாள வாத்தியங்களுடன் மாவீரர்களின் பெற்றோர்கள் அழைத்து வரப்பட்டு மாநகரசபை கலாச்சார மண்டபத்தில் உணர்வு பூர்வமாக இந்நிகழ்வு நடைபெற்றது.
அனைத்து தரப்பினரின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படவுள்ள கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் நாள் நினைவு கூறல் நிகழ்வு ஏற்பாடுகள் சிறப்பாக நடாத்த அனைவரும் முன்வர வேண்டும் என அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் பணிக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் நாள் நினைவு கூறல் நிகழ்வு ஏற்பாடுகள் சிறப்பாக நடாத்த அனைவரும் முன்வர வேண்டும் என அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் பணிக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் ஏற்பாட்டு குழுவின் ஏற்பாட்டில் இன்று மாவீர் வாரத்தின் நான்காம் நாள் நினைவஞ்சலி இடம்பெற்றது

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னமியினரின் மாவீரர்கள் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு றொசான் தலமையில் இன்று காலை 10:00 மணியளவில் இடம் பெற்றது.
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி
மாவீரர் பெற்றோர் மறறும் உரித்துடையோர் மதிப்பளிக்கும் நிகழ்வு வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் முன்னெடுக்கப்பட்டது.

மாவீரர் பெற்றோர்/ உரித்துடையோர் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு ஓழுங்கமைக்கப்பட்ட மண்டபத்தில் இரு மாவீரர்களன் தந்தை ஒருவரால் சுடரேற்றப்பட்டு நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
யுத்தத்தில் உயிர் நீத்த மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையோர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு யாழ். சாவகச்சேரி நகரசபை பொன் விழா மண்டபத்தில் நடைபெற்றது.

மாவீரர் வாரத்தினை முன்னிட்டு மாவீரர்களின் பெற்றோருக்கு மதிப்பளிக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. மட்டக்களப்பு வாகரையில் இன்று மாலை மாவீரர் மதிப்பளிக்கும் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
தங்க விலையில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்.. சர்வதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பாபா வங்காவின் தகவல்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |











ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam