யுத்தத்தில் மூன்று பிள்ளைகளை இழந்த தாய்! வறுமையோடு போராடும் அவலம் (Video)
இலங்கையின் கொடுரமான நீண்ட கால உள்நாட்டு போரின் போது தமது உயிரை இழந்த மாவீரர்கள், காணாமல் போன எமது உறவுகளின் வலிகளை வெறும் வார்த்தைகளால் அடக்கி விடமுடியாது.
போர் நடந்துகொண்டிருந்த போதும் போர் முடிந்த பிறகும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது.
போர் முடிந்து ஒரு தசாப்தமே முடிந்திருந்த போதிலும், அது ஏற்படுத்திய காயங்களை உலகின் பல்வேறு மூளைகளில் வாழும் இலங்கைத் தமிழ் மக்கள் வெளிப்படுத்திக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
தனது மூன்று பிள்ளைகளையும், கணவனையும் தாய்மண்ணுக்காக இழந்து இன்று தனியாக வாழ வழியின்றி தவித்து வருகின்றார்.
முல்லைத்தீவு தேவிப்புரம் என்ற கிராமத்தில் வாழும் மாவீரர் ஒருவரின் தாயின் கண்ணீர் கதையே இது.
இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் WhatsApp / Viber - +94767776363 / +94212030600 |