யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் (PHOTOS)
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபியில் மாலை6.05 மணியளவில் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது மாவீரர்கள் நினைவாக இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
பண்டிதரின் தாயார் ஈகைச்சுடரை ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து மாவீரர் நினைவுத்தூபிக்கு பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்கள் தமிழ்த்தேசியப் பற்றாளர்கள் என பெருந்திரளானோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து மாவீரர் நினைவாகப் பயனுள்ள மரக்கன்றுகளை நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டோருக்கு வழங்கப்பட்டது.
மாவீரர் வாரம் கார்த்திகை 21ம் திகதி ஆரம்பமாகிய நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் தின நினைவேந்தல் தொடர்ச்சியாக இடம்பெற்றது.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை தியாகம் செய்தவர்கள் நினைவாக, கார்த்திகை 27 ஆம் திகதி, மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


மீண்டும் பதின்மூன்றா....! 6 மணி நேரம் முன்

பெட்ரோல் நிலையத்தில் கிடந்த 'ஆண் குறி'! அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்.. பின்னர் தெரிய வந்த உண்மை News Lankasri

பிரித்தானியாவுக்குள் கால் வைத்தால் கைது, நாடுகடத்தல்தான்: சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்கு ரிஷி எச்சரிக்கை... News Lankasri

மெஸ்சி அடித்த கோலை மறுத்த நடுவர்! இருமுறை பெனால்டிகளை தவறவிட்ட எம்பாப்பே..அதிர்ச்சியடைந்த PSG ரசிகர்கள் News Lankasri

முதலில் தவறிய வாய்ப்பு..பின் கோல்கீப்பரிடம் மாயாஜாலம் செய்து கோல் அடித்த மெஸ்சி..PSG வெற்றியால் ஆர்ப்பரித்த மைதானம் News Lankasri
