தென்னிலங்கை அதிவேகப் பாதையில் பற்றி எரிந்த சொகுசு பேருந்து
தென்னிலங்கை அதிவேகப் பாதையின் பெலியத்தை இடமாறல் நுழைவுப் பாதை அருகே சொகுசுப் பேரூந்து ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது.
இது தொடர்பான காணொளிக் காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருகின்றது.
இந்த விபத்து தென்னிலங்கை அதிவேகப் பாதையின் பெலியத்தை நுழைவுப் பாதை அருகே இன்றைய தினம் (15.1.2024) முற்பகல் நடைபெற்றுள்ளது.
திடீரென தீப்பற்றி விபத்து
இதன்போது பதுளையில் இருந்து பெலியத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பேரூந்து ஒன்றே திடீரென தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.

எனினும் தீ முழுமையாகப் பரவி, பேரூந்து முற்றாக தீப்பிடிக்கும் முன்பாக அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பான முறையில் இறக்கப்பட்டு விட்டதாகவும், பயணிகள் எவருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை என்றும் அதிவேகப் பாதை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நிகழ்ந்த சோகம்: கொடூர தாக்குதலில் 80 வயது மூதாட்டி பலி News Lankasri
பிரித்தானிய ஏவுகணையை பயன்படுத்திய உக்ரைன்: ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல் News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியனாக நடிக்கும் ஸ்டாலின் முத்துவின் குடும்ப புகைப்படங்கள் Cineulagam
கடற்கொள்ளையில் ஈடுபடும் ட்ரம்ப் நிர்வாகம்... எண்ணெய் கப்பல் விவகாரத்தில் ரஷ்யா கடும் தாக்கு News Lankasri