சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்தும் அழகுசாதன பொருட்கள்! வெளியான புதிய தகவல்
இலங்கையில் அழகுசாதனப் பொருட்களை ஒழுங்குபடுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள புதிய சட்டமூலம், அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் பொதுமக்களின் கருத்துக்காக முன்வைக்கப்படவுள்ளது.
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் (NMRA) தலைவர் ஆனந்த விஜேவிக்ரம இதனை தெரிவித்துள்ளார். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இந்த சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக ஒரு குழு ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்தது.
தற்போது இந்த சட்டமூலம் சம்பந்தப்பட்ட தரப்பினரின் பார்வைக்கு வைக்கப்பட்டு, அவர்களது கருத்துக்கள் மீளாய்வு செய்யப்பட்டு வருகின்றன.
விளம்பரப்படுத்தப்படும் நிறமூட்டும் அழகுசாதனப் பொருட்கள்
இந்தச் செயல்முறைகள் முடிவடைந்தவுடன், 2026 ஜனவரியில் பொதுமக்கள் தமது கருத்துக்களைத் தெரிவிக்க வாய்ப்பளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்கள் வாயிலாக விளம்பரப்படுத்தப்படும் நிறமூட்டும் அழகுசாதனப் பொருட்கள்'' (Fairness Products) மற்றும் வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாகக் கொண்டுவரப்படும் பொருட்கள் எவ்வாறு கண்காணிக்கப்படும் விதம் தொடர்பில் கருத்து தெரிவிப்பது கடினம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை நிறுவனம் 1980 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க அழகுசாதனப் பொருட்கள், சாதனங்கள் மற்றும் மருந்துகள் சட்டத்தின் (CDDA) விதிகளைப் பயன்படுத்தியே கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
அத்துடன் முறையான சட்டத்தை கொண்டு வருவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து சுகாதாரத் துறை வட்டாரங்கள் கவலை வெளியிட்டுள்ளன.
கடற்கொள்ளையில் ஈடுபடும் ட்ரம்ப் நிர்வாகம்... எண்ணெய் கப்பல் விவகாரத்தில் ரஷ்யா கடும் தாக்கு News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியனாக நடிக்கும் ஸ்டாலின் முத்துவின் குடும்ப புகைப்படங்கள் Cineulagam
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நிகழ்ந்த சோகம்: கொடூர தாக்குதலில் 80 வயது மூதாட்டி பலி News Lankasri