மூன்றாவது தடுப்பூசி தொடர்பில் வெளியான புதிய செய்தி - செய்திகளின் தொகுப்பு
இரண்டாவது சினோபாம் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டுள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாக பைசர், அஸ்ட்ரா செனேகா அல்லது மொடர்னா தடுப்பூசிகளை வழங்குவது அவசியம் என்று விசேட மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, 20 - 30 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கு பைசர் தடுப்பூசியை செலுத்துவது முறையற்றதெனவும், அது விஞ்ஞானபூர்வ தரவுகளை மீறும் செயற்பாடு என்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
தடுப்பூசி வழங்குவது தொடர்பில் தீர்மானம் எடுப்பவர்கள் அதற்காக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் நிபுணர்கள் குழு, உலக சுகாதார ஸ்தாபனம் ஆகியவற்றின் அனுமதியுடன் முன்வைக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றுவது அவசியமாகும் என்றும் மேற்படி சங்கம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
