அதிவேக நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் சடலம் கண்டுபிடிப்பு - செய்திகளின் தொகுப்பு
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிபென்ன பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு ஜீப் வண்டியில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மாலபே, பிரதேசத்தை சேர்ந்த தினேஷ் ஜயவீர என்ற 45 வயதுடைய பொறியியலாளர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் கடந்த 30ஆம் திகதி காலை வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.
அவர் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை ஊடாக மாத்தறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது வெலிபென்ன பிரதேசத்திற்குள் நுழைந்துள்ளார் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,