நாமலுக்காக பதவியிலிருந்து விலகுகிறாரா மஹிந்த? ராஜபக்சர்கள் எடுத்துள்ள முக்கிய முடிவு - செய்திகளின் தொகுப்பு
பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகி பிரதமர் பதவியை தனது மகன் அமைச்சர் நாமல் ராஜபக்சவிடம் ஒப்படைக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இது குறித்து நீண்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் பதவியை நாமல் ராஜபக்சவுக்கு வழங்குவது தொடர்பாக ராஜபக்ச குடும்பத்திற்குள் இரண்டு மாதங்கள் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோரும் கலந்துரையாடலில் இணைந்துகொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,