இலங்கையில் தயார் நிலையில் சிறப்பு விமானங்கள், ஹெலிகொப்டர்கள்! செய்திகளின் தொகுப்பு
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக திடீர் அனர்த்தங்கள் ஏற்படுமாயின், அந்த நிலைமையை எதிர்கொள்ள விமானப்படையின் சிறப்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, அனர்த்த நிலைமையின் போதான மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு என 9 ஹெலிகொப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் குறூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்தார்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் முன் வைத்துள்ள கோரிக்கைக்கு அமைய, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன இதற்கான ஆலோசனைகளை வழங்கியதாகவும், அதன் பிரகாரமே ஹெலிகொப்டர்களும், சிறப்பு மீட்பு பயிற்சி பெற்ற குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக குறூப் கெப்டன் துஷான் விஜேசிங்க கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான செய்திகளின் தொகுப்பு,