கொழும்பில் விரைவில் ஏற்படவுள்ள மாற்றம்! ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு: செய்திகளின் தொகுப்பு
கொழும்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நிரந்தர போக்குவரத்து திட்டம் ஒன்றை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட, பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ (Nihal Thalduwa) தெரிவித்துள்ளார்.
இதற்கான ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், நாடளாவிய ரீதியில் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட நிலையில், கொழும்பு போன்ற புறநகர் பகுதிகளில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசல் குறித்து அவதானம் செலுத்தி திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என இலங்கை பொலிஸார், விமானப்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு ஜனாதிபதி கோட்டாபய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,