வசந்த முதலிகேவின் உயிர் ஆபத்தில்! சட்டத்தரணி நுவான் போபகே - செய்திகளின் தொகுப்பு
மாணவர் தலைவர் வசந்த முதலிகேவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக சட்டத்தரணி நுவான் போபகே தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல, இசுறுபாயவில் கல்வி அமைச்சுக்குள் பலவந்தமாக நுழைந்த குற்றத்திற்காக முதலிகே மற்றும் 56 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணி நுவான் போபகே, கைதானவர்களை மேல் மாகாணம் முழுவதும் உள்ள பல பொலிஸ் நிலையங்களுக்கு மாற்றுவது பொலிஸ் காவலில் உள்ளவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு குறித்து சந்தேகத்தை எழுப்புவதாகக் கூறியுள்ளார்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்டோருக்கு மூன்று நாட்கள் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இன்று (24) கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது மதிய நேர செய்திகளின் தொகுப்பு,

பாகிஸ்தானுக்கு அடுத்த அதிர்ச்சி., இந்தியக கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு News Lankasri
