ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தால் ஊசலாடும் மசகு எண்ணெய் விலை
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணை தொடர்பான ஈரானின் மாறிவரும் அறிவிப்புகளால் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை கடும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது.
நேற்றைய (17.4.2026) நிலவரப்படி, சர்வதேச சந்தையில் பிரெண்ட் மசகு எண்ணெய் (Brent crude) விலை 9 சதவீதத்திற்கும் மேலாகச் சரிந்து பரல் ஒன்றுக்கு $90.38 ஆகக் குறைந்தது.
மார்ச் 10ஆம் திகதிக்குப் பிறகு எண்ணெய் விலை இவ்வளவு குறைவாகச் சரிந்தது இதுவே முதல் முறையாகும்.
போர் நிறுத்தம்
இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே ஏற்பட்டுள்ள 10 நாள் போர்நிறுத்தத்தை முன்னிட்டு, ஹோர்முஸ் நீரிணை "முற்றிலும் திறந்திருக்கும்" என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்திருந்தார்.
உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் விநியோகம் செய்யப்படும் இந்த வழித்தடம் திறக்கப்பட்டதால், சந்தையில் விநியோகம் தடையின்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விலை பெருமளவு சரிந்தது.

இதனை வரவேற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அந்த வழித்தடம் "முழுமையான போக்குவரத்திற்குத் தயார்" என்று அறிவித்தார்.
இருப்பினும், இன்று சனிக்கிழமை ஈரான் தனது முடிவை மாற்றிக்கொண்டது. ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் கடல்வழி முற்றுகை நீங்கும் வரை, ஹோர்முஸ் நீரிணை வழியாக போக்குவரத்து அனுமதிக்கப்படாது என்று ஈரான் மீண்டும் எச்சரித்துள்ளது.
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் உள்ளிட்ட விவகாரங்களில் ஒரு முடிவு எட்டப்படும் வரை தமது முற்றுகை தொடரும் என்று ட்ரம்ப் கூறியதைத் தொடர்ந்து ஈரான் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.
மசகு எண்ணெய் விலை
இன்று(18.4.2026) காலை நிலவரப்படி, மரைன் ட்ராஃபிக் (MarineTraffic) தரவுகள் ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து கணிசமாக அதிகரித்துள்ளதைக் காட்டுகின்றன.
போர் தொடங்கிய பிறகு அந்தப் பகுதி இவ்வளவு பிஸியாக இருப்பது இதுவே முதல் முறை என்று கடல்சார் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

நீரிணை மீண்டும் மூடப்படுவதால் ஏற்கனவே தட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் விநியோகம் மேலும் பாதிக்கப்பட்டு, விலை மீண்டும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
கடந்த மார்ச் 19-இல் மசகு எண்ணெய் விலை அதிகபட்சமாக $119-ஐத் தொட்டது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் 22ஆம் திகதியுடன் போர்நிறுத்தக் கெடு முடிவடைவதற்குள், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சமரசத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் அதிகாரிகள் தீவிரமாக முயன்று வருகின்றனர்.
இந்த எரிசக்தி அதிர்ச்சி காரணமாக உலகெங்கிலும் எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதாரங்கள் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன.
கோமதியிடம் அடுத்த குண்டை தூக்கிப்போட்ட மீனா, இனி நடக்கப்போவது என்ன... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri
சோழனை நம்பாமல் சேரன், பாண்டி செய்த காரியம், ஆனால் நிலா... அட்டகாசமான அய்யனார் துணை சீரியல் Cineulagam