விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் பயன்பாட்டில் : சர்ச்சையை ஏற்படுத்திய TID விசாரணை

Vavuniya Sri Lanka Final War Northern Province of Sri Lanka
By Rukshy Jul 31, 2025 12:00 PM GMT
Report

தென்னிலங்கையில் இடம்பெற்ற குற்றச் செயல்களுக்கு வடக்கில் புதைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றது என சந்தேகம் நிலவுவதாகவும், அது குறித்து மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு (TID) கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேனவிடம் தெரிவித்துள்ளது.

அண்மையில், வவுனியாவில் மீட்கப்பட்ட 86 கைக்குண்டுகள், 321 T-56 வகை துப்பாக்கி ரவைகள் மற்றும், 5,600 கிராம் வெடிமருந்துகளுடன் கைது செய்யப்பட்ட நபர் உட்பட வவுனியா பகுதியைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் மூன்று சந்தேக நபர்களையும் 90 நாட்களுக்குத் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி கோரியுள்ளதாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.


தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள 

வவுனியா - நேரியகுளம் பகுதியைச் சேர்ந்த காரியப்பெரும ரமேஷ், அந்தோணி பெர்னாண்டோ மற்றும் முகமது ராசிக் ஆகிய மூன்று சந்தேக நபர்களையும் இவ்வாறு தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் விசாரணை அதிகாரிகள் மன்றுக்கு தெரிவித்தனர்.

விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் பயன்பாட்டில் : சர்ச்சையை ஏற்படுத்திய TID விசாரணை | Ltte Weapons Sold To Underworld Gangs

மேலும் குறித்த சந்தேக நபர்கள் வவுனியா பிரதேச புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

தென்னிலங்கையில், குற்றச் செயல்கள் மேற்கொள்ள வவுனியா பகுதியிலிருந்து T-56 துப்பாக்கியுடன் வந்த ஒருவர் கடந்த 21 ஆம் திகதி கிரிபத்கொட பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவரிடம் மேற்கொள்ளப்ட்ட விசாரணைகளின் மூலம் மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாகவும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியது.

நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்கள் 

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின் போது வடக்கில் மறைத்து வைக்கப்பட்ட துப்பாக்கிகள் தெற்கில் இடம்பெற்ற குற்றங்களுக்கு பயன்படுத்தப்பட்டதா?, தெற்கில் உள்ள பாதாள உலக செயல்பாட்டாளர்களுக்கு ஆயுதங்கள் விற்கப்பட்டு பணம் பெறப்பட்டதாக சந்தேகம் இருப்பதால், இது தொடர்பாக மூன்று சந்தேக நபர்களிடமும் நீண்ட நேரம் விசாரிக்க வேண்டும் என்றும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.

விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் பயன்பாட்டில் : சர்ச்சையை ஏற்படுத்திய TID விசாரணை | Ltte Weapons Sold To Underworld Gangs

தெற்கில் உள்ள பாதாள உலக செயல்பாட்டாளர்களுக்கு அத்தகைய ஆயுதங்கள் விற்கப்பட்டு பணம் பெறப்பட்டதா என்பது குறித்து நடத்தப்படும் விசாரணைகளுக்காக மூன்று சந்தேக நபர்களின் வங்கிப் பதிவுகளைப் பெற உத்தரவு பிறப்பிக்குமாறு அதிகாரிகள் நீதிமன்றத்த்தில் கோரிக்கை விடுத்தனர்.

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்களை கருத்தில் கொண்ட நீதிபதி, மூன்று சந்தேக நபர்களையும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்கவும், அவர்களின் வங்கிக் கணக்கு பதிவுகளை அழைக்கவும் புலனாய்வுப் பிரிவுக்கு அனுமதி வழங்கியுள்ளார்.

மேலும் இது தொடரபான மேலதிக விசாரணைகளை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தோடு உயிரை மாய்த்த இலங்கை அரசியல்வாதி வெளிவரும் பல அதிர்ச்சி தகவல்கள்!

குடும்பத்தோடு உயிரை மாய்த்த இலங்கை அரசியல்வாதி வெளிவரும் பல அதிர்ச்சி தகவல்கள்!

மட்டக்களப்பில் கழுத்தில் இருந்து தங்க சங்கிலியை அறுத்த கொள்ளையர்கள்! பரிதாபமாக உயிரிழந்த வயோதிப பெண்

மட்டக்களப்பில் கழுத்தில் இருந்து தங்க சங்கிலியை அறுத்த கொள்ளையர்கள்! பரிதாபமாக உயிரிழந்த வயோதிப பெண்

குடும்பஸ்தரின் உயிரை பறித்த தூரியன்

குடும்பஸ்தரின் உயிரை பறித்த தூரியன்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US