விடுதலைப் புலிகள் தலைவரின் இருப்பு தேசியச் செய்தியாக காரணம்..! திடீரென அமைக்கப் படும் புது வியூகம்
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கின்றார், அவர் நலமுடன் மீண்டும் வருவார் என்று உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்த கருத்து, என்னைப் பொறுத்தவரை உண்மைக்கு புறம்பானதாகவே கருதுகின்றேன் என அமெரிக்காவின் சாஸ்பெரி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி கீத பொன்கலன் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுடன் நான் தொடர்பில் இருக்கின்றேன், விரைவில் அவர் நலமுடன் வருார் என பழ. நெடுமாறன் கூறுகின்றார். தனிப்பட்ட ரீதியில் நான் நினைக்கின்றேன் அவர் உண்மைப் பேசவில்லை.
தர்க்கரீதியாக பார்த்தால், நெடுமாறனின் கருத்தில் இரண்டு காரணங்கள் தென்படுகின்றது, ஒன்று தன்னுடைய சொந்த அரசியல் நலனுக்காக அவர் இதனை கூறுவதாக இருக்கலாம். ஏனென்றால், எந்தவொரு முக்கியத்துவமும் இல்லாமல் இருந்த சூழ்நிலையில், இது தேசிய மட்டத்திலான செய்தியாக அடிபடுவதற்கான ஒரு மாற்றம் மிக்க செயற்பாட்டாளராக அவர் மாறியிருக்கின்றார்.
தனிப்பட்ட ரீதியில் அவருக்கு அதில் ஒரு நலன் இருப்பதாக கருதுகின்றேன்.
அப்படி இல்லை என்றால், இந்திய புலனாய்வுத் துறையினருடைய உந்துதல் காரணமாக இவ்வாறான ஒரு செய்தி கூறப்பட்டிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan
