விடுதலைப் புலிகளின் தலைவருக்கு 2009இல் படையினர் முடிவுகட்டி விட்டனர்! கோட்டாபய கூறியதாக தகவல்
தமிழீழ விடுதலைப் புலிப் பயங்கரவாத அமைப்பின் தலைவர் பிரபாகரனுக்கு 2009இல் எமது படையினர் முடிவுகட்டி விட்டார்கள் என போரின் போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகப் பணியாற்றிய வரும், முன்னாள் ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ச தெரிவித்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
போர்க்களத்தில் இருந்து அவரின் சடலத்தை மீட்டு எரித்தோம், அதன்பின்னர் அவர் எப்படி உயிருடன் இருப்பார் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளதாக தெரியவருகிறது.
பிரபாகரனின் பெயரை பயன்படுத்தி அரசியல் செய்வதாக குற்றச்சாட்டு
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில், பிரபாகரன் மட்டுமல்ல அவரின் மனைவி, மகள், மூத்த மகன், இளைய மகன் ஆகியோரும் இறுதிப் போரில் உயிரிழந்து விட்டார்கள்.

மனநோய் பிடித்தவர்கள் பிரபாகரனின் பெயரைப் பயன்படுத்தி அரசியல் செய்ய முனைகின்ற அதேவேளை, அவர்களில் சிலர் பிரபாகரனை உயிர்ப்பிக்கவும் முயற்சிக்கின்றனர்.
இந்த மனநோயாளர்களின் கருத்துக்குப் பதிலளிப்பது எமக்குத்தான் வெட்கக்கேடு என குறிப்பிட்டுள்ளார் என கூறப்படுகிறது.
you may like this video
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியாக நடிக்க ஒரு நாளைக்கு நடிகை VJ பார்வதி வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
மயிலுக்காக கோமதியிடம் பேசிய மீனாவிற்கு ஏற்பட்ட நிலைமை, லஞ்சம் வாங்கிய செந்தில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ராஜினாமா செய்த ஜெயசூரியா: இந்தியாவிற்கு உலகக்கிண்ணத்தைப் பெற்று தந்தவரை நியமித்த இலங்கை News Lankasri