ஜூலை முதல் நடைமுறைக்கு வரும் திட்டம்! வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்படவுள்ள பணம்
ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு வரும் நலத்திட்ட உதவி கொடுப்பனவுகள் பயனாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வைப்புச் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அலுவலகம் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நேரடியாக வரவு வைக்கப்படும்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ், நலன்புரி பயனாளிகளின் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதில் எதிர்நோக்கும் சவால்களுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், பயனாளிகளின் வங்கிக் கணக்கில், தேவையான நலத்திட்ட உதவிகள் நேரடியாக வரவு வைக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |