குறைந்த விலையில் வாகனங்கள் விற்பனை - பொது மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் சட்டவிரோதமான முறையில் பொருத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் அவற்றின் புத்தகங்களை மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்வது தொடர்பில் பகிரப்படும் பேஸ்புக் கணக்குகள் தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறான தகவல்களை பகிரும் பேஸ்புக் கணக்குகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
போலி பிரசாரம்
இது குறித்து தகவல் தெரிந்தால் 1997 என்ற எண்ணுக்கு தெரிவிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

“தற்போது, வாகனங்கள் மற்றும் அவற்றின் புத்தகங்கள் பேஸ்புக் மற்றும் சமூக ஊடகங்களில் விற்பனைக்கு வெளியிடப்படுகின்றன.
அந்த பேஸ்புக் பக்கங்களை தனித்தனியாக ஆய்வு செய்து விசாரணை குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
அந்த வகையில் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவை எதிர்காலத்தில் விசேட விசாரணைகளாக நடைமுறைப்படுத்தப்படும்.
மக்களுக்கு எச்சரிக்கை
அதனால் தான் 1997 என்ற ஒரு தொலைபேசி எண் கூட அறிமுகப்படுத்தப்பட்டது. உளவுப் பிரிவுகளும், சம்பந்தப்பட்ட பொலிஸ் துறைகளின் புலனாய்வு அதிகாரிகளும் பேஸ்புக்கில் பணியாற்றி வருகின்றனர்.

மேலும், சட்டவிரோதமாக இணைப்பு செய்யப்பட்ட வாகனங்கள் மீதும் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.
இதுகுறித்து பொலிஸ் தரப்பில் கேட்டபோது, முறையான பதிவு செய்யப்படாத, முறைகேடாக பொருத்தும் வாகனங்களை சுற்றிவளைப்பு செய்யும் அரசின் நடவடிக்கையால், சிலர் குறைந்த விலைக்கு விற்கும் நடவடிக்கையை மேற்கொள்வதாகஎன அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan