நுவரெலியாவில் சோளம் ஏற்றிச் சென்ற லொறி விபத்து
மொனராகலை பகுதியிலிருந்து அம்பேவல பாற்பண்ணைக்கு சோளம் ஏற்றிச்சென்ற லொறியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து, நுவரெலியா - ரூவான்எலிய பகுதியில் இன்று(10.01.2026) நேர்ந்துள்ளதாக நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லொறி பிரதான வீதியில் குடைசாய்ந்துள்ளதால் அந்த வீதி வழியான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அப்பகுதி போக்குவரத்து தற்போது ஒருவழி பாதையாகவே இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
லொறியில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக சாரதிக்கு கட்டுப்படுத்த முடியாத காரணத்தால் விபத்து ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

லொறியில் சாரதியும், உதவியாளரும் பயணித்துள்ளதாகவும், எனினும் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த லொறியில், இருந்த சோள செடிகளை பிரதேச மக்களின் உதவியுடன் மற்றுமொரு பாரவூர்திக்கு ஏற்றிச்செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

