படுகொலை செய்யப்பட்ட 44 ஊடகவியலாளர்களுக்கும் நீதி கிடைக்காது! இரா- சாணக்கியன்(Video)
படுகொலை செய்யப்பட்ட லசந்தவிற்கு எதிராக அன்று பாதுகாப்பு செயலாளராக இருந்த ஜனாதிபதி வழக்கு தாக்குதல் செய்திருந்தார்.
அவருக்காகச் சட்டத்தரணியாக இருந்தவர் தான் இன்று நீதி அமைச்சர், எனவே லசந்த உட்படப் படுகொலை செய்யப்பட்ட 44 ஊடகவியலாளர்களுக்கும் நீதி கிடைக்கும் என எதிர்பார்ப்பது கஷ்டம் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிகம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் லசந்த விக்கிரமதுங்கவின் 12வது நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவு தூபியில் இன்று (08) இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொழும்பிலே இருக்கும் பல ஊடகங்கள் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் பத்திரிகையாளர்களை அரசு தமது வியாபாரிகளை விட்டு அனைத்தையும் கைப்பற்றும் சில நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதுடன் பல சிரேஷ்ட ஊடகவியலாளர்களுக்கு தொலைபேசி அழைப்புக்களை விடுத்து நீங்கள் இவ்வாறான வேலைகளைத் தொடர்ச்சியாக செய்வீர்களானால் உங்களை வேலையிலிருந்து நீக்கவேண்டிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக நாங்கள் அறிகின்றோம்.
2022 ம் ஆண்டிலே ஜனாதிபதியாக இருக்கும் அவர்தான் அன்று பாதுகாப்பு செயலாளராக இருந்தவர். அவர் 2009 ம் ஆண்டு லசந்த விக்கிரமசிங்க கொல்லப்பட்டதன் பிறகு கொடுத்த போட்டி ஒன்றைப் பார்த்திருந்தேன் அப்போது யார் இந்த லசந்த என்று கேட்டிருந்தார். எனக்கும் அவருக்கும் எதுவித பிரச்சனையும் இல்லை.
ஆனால் அவருக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்ய இருக்கின்றேன் என்றவர் தான் இன்று நாட்டிலே ஜனாதிபதியாக இருக்கின்றார். அவருக்காக வழக்கு பேசிய அலி சப்ரி தான் இந்த நாட்டிலே நீதி அமைச்சராக இருக்கின்றார்.
ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்குப் பல அச்சுறுத்தல் இருக்கும் காலப்பகுதியில் அப்படியான காலப்பகுதியில் தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். லசந்த மட்டுமல்ல 44 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும். அதேவேளை பொலிஸாரால் லசந்த கொலை தொடர்பாக வழக்கு தொடரவில்லை. இருந்தபோதும் நல்லாட்சி அரசாங்கத்தில் கூட அந்த வழக்கை ஆரம்பித்தாலும் அதைத் திருப்திகரமான முடிவை எந்த அரசாங்கமாக இருந்தாலும் பெற முடியவில்லை என்பது கவலையான விடயம்.
எனவே இனிவரும் காலங்களிலாவது படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி
கிடைக்கவேண்டும் கொலை செய்யப்பட்டவர்களுக்கு அரசாங்கத்தாலே நீதிமன்றத்தாலே
தண்டனை வழங்காவிட்டாலும் இறைவன் தண்டனை வழங்குவான் என தெரிவித்துள்ளார்.