இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்
பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள் மீண்டும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த வரிசையிலேயே பலர் தங்கள் இரவைக் கழித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 12 மணி நேரமாக வரிசையில் காத்திருந்தும் பணம் செலுத்த வாய்ப்பு கூட கிடைக்கவில்லை என மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
மீண்டும் வரிசைகள்
அதிகாரிகளின் மெத்தன போக்கு மற்றும் திறமையின்மை காரணமாகவே வரிசைகள் மீண்டும் உருவாகியுள்ளதாக அங்குள்ள மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

எனினும் 24 மணிநேர கடவுச்சீட்டு விநியோகிக்கும் சேவையின் ஊடாக நீண்ட வரிசை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதுடன், தற்போது வழமையான முறையில் அந்த சேவைகள் இடம்பெறுவதாக அரசாங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri