இயக்கச்சியில் பண்ணையில் இயற்கை உரங்களால் காய்த்துக் குலுங்கும் பயத்தங்காய்
கிளிநொச்சி (kilinochchi) இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் (Reecha Organic Farm) பயத்தங்காய் அறுவடை சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எவ்வித இரசாயண பதார்த்தங்களும் உபயோகிக்காமலே இவ்வாறு செழிப்பான முறையில் காய்த்துள்ள பயத்தங்காய் ஒரு விசேட அம்சமாகும்.
கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் சுற்றுலாத் தலமே றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணை ஆகும்.
சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பண்ணையில் பயிர்ச்செய்கைகள் உட்பட சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல்வேறுபட்ட புதிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.