தமிழ் மக்களுக்கு எதிரான பல அட்டூழியங்கள்! லண்டனில் சந்திரிகாவுக்கு கடும் எதிர்ப்பு
லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுக்கு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளமைக்கு தமிழ் மாணவர் அமைப்புகள் பல எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இலங்கையின் 75வது ஆண்டு சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் இந்த நிகழ்வானது, “சிலோன் டு ஸ்ரீலங்கா: தேசத்தில் ஒரு பயணம்” என்ற தலைப்பில் எதிர்வரும் 16 ஆம் திகதி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வுக்கு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார்.
கூட்டறிக்கை வெளியீடு
இந்த அழைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் இளையோர் அமைப்பு பல்வேறு மாணவர் அமைப்புகளின் கையெழுத்தோடு கூட்டறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை அழைப்பதற்கு பல காரணங்களை முன்வைத்து அமைப்புக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன.
அந்த வகையில், 1995 கடற்படைத் தேவாலய குண்டுவெடிப்பு, 1995 நாகர்கோவில் பள்ளி படுகொலை, 1996 குமாரபுரம் படுகொலை, 1998 தம்பலகாமம் படுகொலைகள் மற்றும் 1999 புதுக்குடியிடுப் படுகொலை உட்பட தமிழ் மக்களுக்கு எதிரான பல அட்டூழியங்களை மேற்கோள் காட்டியுள்ள மாணவர் சந்திரிக்காவை அழைத்திருப்பதை கடுமையாக கண்டிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

பாகிஸ்தான் - இலங்கை போராட்டங்களின் பின்னணி 22 மணி நேரம் முன்

ரூ. 150 கோடி மதிப்பில் தனுஷ் வீட்டின் வெளியே பார்த்திருப்பீர்கள்?- உள்ளே முழு வீட்டை பார்த்துள்ளீர்களா, வீடியோவுடன் இதோ Cineulagam

இது ரகசியமாக இருக்கட்டும்... லண்டனில் 12 வயது சிறுமியிடம் அத்துமீறிய தமிழரின் அருவருக்க வைக்கும் பின்னணி News Lankasri

மிகவும் ஆபத்தானவர், நெருங்க வேண்டாம்: தீவிரமாக தேடப்படும் தமிழர் தொடர்பில் லண்டன் பொலிசார் எச்சரிக்கை News Lankasri

லண்டனில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்... தாயாரும் இரண்டு பிள்ளைகளும்: வெளிவரும் பகீர் பின்னணி News Lankasri

சுவிட்சர்லாந்தின் Credit Suisse-UBS வங்கிகள் இணைப்பால் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு பாதிப்பு! News Lankasri
