ருமேஷ் தரங்கவின் வெற்றிப் பயணத்தில் கைகோர்க்கும் LOLC
இலங்கையின் முன்னணி ஈட்டி எறிதல் வீரரான ருமேஷ் தரங்கா பதிரகவின் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் பயணத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், நாட்டின் மிகப்பெரிய வங்கி சாரா நிதி நிறுவனமான LOLC ஃபைனான்ஸ் பிஎல்சி (LOLC Finance PLC) அவருடன் கைகோர்த்துள்ளது.
2026 முதல் 2028 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிக்காக இந்த விசேட அனுசரணை ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஈரானியர்களின் சடலங்களை ஒப்படைக்க இலங்கை அரசு தயார் : ஈரான் அரசின் உத்தியோகபூர்வ கோரிக்கைக்காகக் காத்திருப்பு
பதக்க மேடையை அலங்கரிக்கும் இலக்கு
இதன்மூலம், ருமேஷின் சர்வதேசப் போட்டிகளுக்கான பயிற்சிகள், பயணங்கள் மற்றும் போக்குவரத்துத் தேவைகளுக்காக ஒரு வாகனம் உட்பட அனைத்து வசதிகளையும் நிறுவனம் வழங்கவுள்ளது.
தேசிய விளையாட்டுத் திறமைகளை சர்வதேச மேடைக்குக் கொண்டு செல்லும் நிறுவனத்தின் அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக LOLCஇன் பணிப்பாளர் கிரிஷான் திலகரத்ன தெரிவித்துள்ளார்.

தற்போது உலகத் தரவரிசையில் ஒன்பதாவது இடத்தில் உள்ள ருமேஷ் தரங்க, 2025 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற உலகத் தடகள சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் இலங்கை ஈட்டி எறிதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றவர்.
அங்கு 84.38 மீட்டர் தூரம் எறிந்து ஏழாவது இடத்தைப் பிடித்ததுடன் அதே ஆண்டில் இந்திய ஓபன் போட்டியில் 86.50 மீட்டர் தூரம் எறிந்து புதிய தேசிய சாதனையையும் படைத்தார்.
தனது தந்தை மற்றும் சர்வதேசப் பயிற்சியாளர்களின் வழிகாட்டலில் வளர்ந்து வரும் ருமேஷ், இந்த அனுசரணையானது தனது விளையாட்டு வாழ்க்கையின் முக்கிய கட்டத்தில் கிடைத்துள்ள பெரும் பலம் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
அடுத்த மூன்று ஆண்டுகளில் 85 மீட்டருக்கும் அதிகமான தூரத்தை நிலையாக எறிந்து, 2028 ஒலிம்பிக் பதக்க மேடையை அலங்கரிப்பதே தனது இலக்கு என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈரானியர்களின் சடலங்களை ஒப்படைக்க இலங்கை அரசு தயார் : ஈரான் அரசின் உத்தியோகபூர்வ கோரிக்கைக்காகக் காத்திருப்பு