தெஹிவளை தபால் நிலையத்திற்கு பூட்டு
பணியாளர் ஒருவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டதன் காரணமாக, தெஹிவளை தபால் நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெஹிவளை தபால் நிலையத்தில் கடமையாற்றி வரும் பெண் பணியாளர் ஒருவர் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக தபால் நிலையத்தினை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
தற்காலிக அடிப்படையில் இந்த தபால் நிலையம் மூடப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த திங்கட்கிழமை பணிக்கு வந்த குறித்த பெண் உத்தியோகத்தர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் மூலம் அந்தப் பெண்ணுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
இந்த பெண் உத்தியோகத்தர் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.