இறால் வளர்ப்பு பண்ணை அமைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பிரதேச மக்கள்
மட்டக்களப்பு - வாகரை பிரதேசத்தில் நேற்று காலை (22) இறால் வளர்ப்பு பண்ணை அமைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதனை தடுத்து நிறுத்தி தருமாறு கோரி பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
நேற்று காலை வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்பு ஒன்று கூடியவர்கள் கையில் வாசகங்கள் எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை பிரதேச செயலகத்தின் வாயில் கதவினை பூட்டியும் செயலக உத்தியோகஸ்த்தர்கள் உள்ளே செல்லாதவாறும் தடுத்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினார்கள்.
பின்னர் பொலிஸாரின் தலையீடு மற்றும் பிரதேச செயலாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கதவினை திறந்து விட்டனர். இதன்போது அவ்விடத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.
மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் இத் திட்டத்தினை ஆரம்பிப்பதற்கு முன்னோடியாகவுள்ளதாகவும் அவர் இத் திட்டத்தினை கைவிடவேண்டுமென தெரிவித்தனர்.
இதன்போது பிரதேச செயலாளர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து கலந்துரையாடலை மேற்கொண்டார்.தெரிவிக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் பேச்சுவார்த்தை பயனற்று போனதால் பிரதேச செயலக நிர்வாகம் அவ்விடத்தினை விட்டு விலகி சென்றனர். இரண்டாம் கட்டமாக மீண்டும் பேச்சு மேற்கொள்ளப்பட்டது.
போராட்டத்தில ஈடுபட்டவர்களில் 10; பேர் கொண்ட நபர்கள் வரவழைக்கப்பட்டு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது. கலந்துரையாடல் நிகழ்வில் இத்திட்டத்திற்கான பல்வேறு குறைபாடுகள் முன்வைக்கப்பட்டு திட்டத்தினை அமுல்படுத்தாதவாறு தடுத்து தருமாறு கோரிக்கை விடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து இத்திட்டத்தினை மேற்கொள்ளும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு அறிக்கை சமர்பிக்கவுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.
வாகரை தட்டுமுனை தொடக்கம் கட்டுமுறிவு வரையான சுமார் 950 கெக்ரயர் அளவு கொண்ட ஆற்று களப்பு பிரதேசங்களில் இறால் பண்ணை அமைக்கும் நடவடிக்கைக்கு காணி தெரிவு செய்யப்பட்டு நில அளவையாளர்களை கொண்டு காணி அளவீடு செய்யப்பட்டு வருவாகவும் இவ் விடயம் தொடர்பாக பிரதேச மட்ட சமூக அமைப்புக்கள் மற்றும் மீனவர் சங்க அமைப்புக்களுடன் எது விதமான கலந்துரையாடல்களை மேற்கொள்ளவில்லையென போராட்டத்தில் ஈடுபட்டோர் கவலை தெரிவித்தனர்.
இவ் நடவடிக்கையினை தொடர்ந்தால் ஆற்றுப் பகுதியினை அண்மித்த பகுதியில் இயற்கை சமநிலையில் குழப்பம் ஏற்படுவதுடன் களப்பு மீன்பிடி,சேனைப் பயிர் செய்கை,காடு அழிப்பு,பறவைகள்,விலங்குகளுக்கு சரணாலயம் இல்லாமல் போதல்,வாழ்வாதாரம் பாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கின்றனர்.





சகோதரி பவதாரணி பாடலை பாடிய போட்டியாளர், எமோஷ்னல் ஆன யுவன், வெங்கட் பிரபு.. சூப்பர் சிங்கர் 11 புரொமோ Cineulagam

இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை முழுமையாக நிறுத்திய ஜேர்மனி - அரசியல் மாற்றத்திற்கு அடையாளம் News Lankasri

தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
