யாழில் நெடுந்தூர பேருந்து சேவைகள் நிறுத்தம்
யாழ்ப்பாணத்தில் உள்ளூர் தனியார் பேருந்து சேவைகள் வழமைபோன்று சேவையை முன்னெடுத்து வருகின்ற நிலையில், நெடுந்தூர பேருந்து சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன.
முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாததால் இன்றுமுதல்(28.02.2024) தனியார் போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது என வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சி.சிவபரன் நேற்று ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
தனியார் பேருந்து சேவை
இந்நிலையில். யாழ்ப்பாணத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு சேவையில் ஈடுபடும் பேருந்துகள், அத்தோடு வெளி மாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் தமது சேவையை முற்றாக இடைநிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், உள்ளூர் தனியார் பேருந்து சேவைகள் வழமைபோன்று தமது சேவையை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் நேரில் சென்று நிலைமைகளை பார்வையிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




