தேர்தலுக்கான நிதி! அமைச்சின் செயலாளருக்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்த தடை
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான நிதி அமைச்சின் செயலாளருக்கு உயர் நீதிமன்றம் தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
இதன்படி, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 2023ஆம் ஆண்டுக்கான தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை நிறுத்தி வைப்பதை தடுத்து உயர் நீதிமன்றம் நிதியமைச்சின் செயலாளருக்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு
பிரீதி பத்மன் சூரசேன, ஜனக் டி சில்வா மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்துமபண்டாரவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அனுமதியளித்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.




