இலங்கையில் மீண்டுமொரு தேர்தல்! தீர்மானத்தை வெளியிட்டது அரசாங்கம்
2025ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
கண்டியில் வைத்து செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போது வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்(Vijitha Herath) இந்த தீர்மானம் குறித்து அறிவித்துள்ளார்.
விரைவில் தேர்தல்
மேலும், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவில் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இரண்டு வருடங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்பு மனுக்களில் சில வேட்பாளர்கள் உயிரிழந்துள்ளதுடன், சிலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, புதிதாக வேட்புமனுக்களை கோருவதா, இல்லையா என்பது தொடர்பில் ஏனைய கட்சிகளுடன் கலந்தாலோசித்த பின்னர் தீர்மானிக்கப்படும்.
அடுத்த வருட ஆரம்பத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த திட்டமிட்டிருந்தாலும், திகதிகள் குறித்து இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என அமைச்சர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தையிட்டி விகாரை : என்ன செய்யலாம் 6 நாட்கள் முன்

43 வயதிலும் அழகில் மயக்கும் நடிகை மீரா ஜாஸ்மின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. பிறந்தநாள் ஸ்பெஷல் Cineulagam

எப்போதும் முத்து தான், ஆனால் இப்போது அண்ணாமலையால் ரோஹினிக்கு வந்த பிரச்சனை.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

எச்சரிக்கையை மீறி அந்த நாட்டிற்கு சுற்றுலா சென்ற பிரித்தானிய தம்பதி சிக்கலில்... கவலையில் குடும்பம் News Lankasri

இந்த நட்சத்திரத்தில் பிறந்த ஆண்கள் மனைவியை இளவரசி போல் நடத்துவார்கள்... யார் யார்ன்னு பாருங்க Manithan

இந்திய கடவுச்சீட்டு இருந்தால் மேலும் 6 நாடுகளிலிருந்து UAE-க்கு விசா இல்லாமல் நுழையலாம் News Lankasri
