உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு
இலங்கையில் உள்ள 340 உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ பதவிக் காலம் இன்று (19) நள்ளிரவுடன் நிறைவடைகிறது.
அதன் பிரகாரம் 29 மாநகர சபைகள், 36 மாநகர சபைகள் மற்றும் 275 உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.
நாடளாவிய ரீதியில் 341 உள்ளூராட்சி மன்றங்கள் உள்ள போதிலும் காலி மாவட்டத்தில் எல்பிட்டிய உள்ளுராட்சி மன்றம் ஸ்தாபிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டதால் அந்த உள்ளூராட்சி சபையின் பதவிக்காலம் இன்று முடிவடையாது.
சட்டத்திற்கு அமைய முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்
இன்று (19) நள்ளிரவுக்குப் பின்னர் உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகப் பணிகள் ஆணையாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற செயலாளர்களின் கீழ் கொண்டு வரப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான சட்டத்திற்கு அமையவே செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர குறிப்பிட்டார்.
தற்போது பாவனையில் உள்ள உத்தியோகபூர்வ வாகனங்களை ஒப்படைக்குமாறு உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 1 நாள் முன்

உக்ரைனில் இறங்கிய பிரித்தானியாவின் சேலஞ்சர் 2 டாங்கிகள்! புடின் எச்சரிக்கையை மீறிய நடவடிக்கைகள் News Lankasri

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri
