நெருங்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: பலர் கைது
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய தாக்குதல் சம்பவங்களில் இதுவரை 79 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், கைது செய்யப்பட்ட நபர்களில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் 18 வேட்பாளர்களும் அடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கடந்த 20 ஆம் திகதி முதல் இன்று வரை ஆயிரத்து 387 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
முறைப்பாடுகள்
வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 06 முறைப்பாடுகளும், சட்டத்தினை மீறியமை தொடர்பில் ஆயிரத்து 293 முறைப்பாடுகளும் வேறு குற்றங்கள் தொடர்பில் 86 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கிடைக்கப்பெற்றுள்ள மொத்த முறைப்பாடுகளில் ஆயிரத்து 387 முறைப்பாடுகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளதாகவும் 173 முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

காணி நிலம் வேண்டும் பராசக்தி 3 நாட்கள் முன்

மாஸ் வெற்றிப் படமாக அமைந்த சூரியின் மாமன் மொத்தமாக செய்துள்ள வசூல்.. அடேங்கப்பா இத்தனை கோடியா? Cineulagam

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீதா, அருணை கண்டதும் முத்து செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

மற்றொரு ஐரோப்பிய நாடு... 10,000 ரஷ்ய வீரர்கள்: பிரதமர் ஒருவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் News Lankasri

சமீபத்தில் திருமணம் செய்த தொகுப்பாளினி பிரியங்காவிற்கு இப்படியொரு சோகமா?... அவரே வெளியிட்ட போட்டோ Cineulagam
