சட்டவிரோத மின்சார வேலியால் இறக்கும் கால்நடைகள் : பண்ணையாளர்கள் கவலை
முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் கல்விளான் பகுதியில் சில பகுதிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள மின்சார வேலிகளில் சிக்கி தமது கால்நடைகள் உயிரிழப்பதாக பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தமது வாழ்வாதாரமான கால்நடைகள் குறித்த சட்டவிரோத மின்சார வெளியில் சிக்கி நோய்வாய் படுவதாகவும் ஓரிரு நாட்களில் அவை இறந்து விடுவதாகவும் தெரிவித்த பண்ணையாளர்கள் இதுவரை 20க்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகளி்ன் அசமந்த போக்கு
இதேவேளை காடுகளில் கால்நடைகளை விட்டு மேய்க்கும் போதும் காடுகளில் கம்பி சுருள் தடங்களினாலும் தமது கால்நடைகள் இறப்பதாக அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மற்றும் கிராம அலுவலகருக்கு தெரியப்படுத்தியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை தமது வாழ்வாதாரமாக இருக்கும் கால்நடைகளை சட்டவிரோத மின்சார வேலியில் இருந்து காப்பாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 10 மணி நேரம் முன்

முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்திய ஆசிய நாடு - சீனாவை எதிர்த்து பாதுகாப்புத் திட்டம் தீவிரம் News Lankasri

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon., 40 பில்லியன் பவுண்டு முதலீடு News Lankasri
