திருகோணமலையில் வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு
பன்முகப்படுத்தப்பட்ட வரவு - செலவு திட்ட ஒதுக்கீட்டில் கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட சுயதொழில் பயனாளிகளுக்கான வாழ்வாதார பொருட்கள் விநியோகிக்கப்பட்டன.
இந்நிகழ்வு, நேற்று (02) கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம். கனியின் தலைமையில் கிண்ணியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
சுய தொழிலாளர்கள்
இந்நிகழ்வில், வறுமைக்கோட்டின் கீழ் வாழக்கூடிய சுயதொழில் செய்யும் வருமானம் குறைந்த ஊக்கமுடைய சுய தொழிலாளர்களை ஊக்குவிப்பதற்காக இப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது, கிண்ணியா பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர், பிரதம முகாமைத்துவ உதவியாளர், நிதி உதவியாளர், திட்டமிடல் கிளையின் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் மற்றும் பயனாளிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |