மக்கள் கூட்டத்தால் நிறைந்து வழியும் லிட்டில் லண்டன்
புத்தாண்டு மற்றும் வசந்த காலத்தை முன்னிட்டு நுவரெலியாவில் எதிர்பாராத அளவு சுற்றுலா பயணிகள் வருகைத்தந்துள்ளனர்.
நுவரெலியாவிலுள்ள சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் தங்குமிடங்களில் சுற்றுலா பயணிகள் நிரம்பி வழிவதாக நுவரெலியா மேயர் சந்தனலால் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய சுற்றுலா பயணிகள் நுவரெலியாவில் புத்தாண்டை கொண்டாடுவற்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பல பகுதிகளில் உள்ள மக்கள் நுவரெலியாவில் உள்ளனர். நுவரெலியா வரும் மக்களை தடுக்க முடியாது.
மக்களுக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. இசை நிகழ்ச்சிகள் உட்பட சில விடயங்கள் இம்முறை தடை செய்யப்பட்டுள்ளது. எனினும் குப்பைகளை உரிய முறையில் கொட்டுமாறும் சூழலை பாதுகாக்குமாறும் பொது மக்களிடம் மேயர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam