மக்கள் கூட்டத்தால் நிறைந்து வழியும் லிட்டில் லண்டன்
புத்தாண்டு மற்றும் வசந்த காலத்தை முன்னிட்டு நுவரெலியாவில் எதிர்பாராத அளவு சுற்றுலா பயணிகள் வருகைத்தந்துள்ளனர்.
நுவரெலியாவிலுள்ள சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் தங்குமிடங்களில் சுற்றுலா பயணிகள் நிரம்பி வழிவதாக நுவரெலியா மேயர் சந்தனலால் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய சுற்றுலா பயணிகள் நுவரெலியாவில் புத்தாண்டை கொண்டாடுவற்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பல பகுதிகளில் உள்ள மக்கள் நுவரெலியாவில் உள்ளனர். நுவரெலியா வரும் மக்களை தடுக்க முடியாது.
மக்களுக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. இசை நிகழ்ச்சிகள் உட்பட சில விடயங்கள் இம்முறை தடை செய்யப்பட்டுள்ளது. எனினும் குப்பைகளை உரிய முறையில் கொட்டுமாறும் சூழலை பாதுகாக்குமாறும் பொது மக்களிடம் மேயர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சனி–சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
நடிகர் ஜிபி முத்து மீது தாக்குதல்.. வீட்டின் முன் மாந்திரீக பூஜை, தட்டி கேட்டதால் தாக்குதல் Cineulagam
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri