எரிவாயு விலைத் திருத்தம் தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு
லிட்ரோ எரிவாயுவின் விலையில் மாற்றம் செய்யப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
மாற்றம் ஏதுமின்றி கடந்த மாத விலையினையே இம்மாதமும் பேணுவதற்கு அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
எரிவாயு விலை திருத்தம்
மாதாந்த விலை திருத்தத்திற்கமைய எரிவாயுவின் விலை இன்று(01) முதல் நடைமுறைக்கு வரும் திருத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
எனினும், மாற்றங்கள் எதுவும் இன்றி அதே விலையை இம்மாதத்திலும் பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மாதாந்த விலை திருத்தத்திற்கு அமைய எரிபொருளின் விலையில் இன்று முதல் மாற்றம் செய்ய வேண்டி இருந்த போதிலும், தற்போதுள்ள எரிபொருள் விலையை திருத்தம் இன்றி மார்ச் மாதத்தில் தக்கவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

டிஆர்பியில் முன்னேறி வரும் விஜய் டிவியின் புதிய சீரியல்.. கடந்த வாரத்திற்கான டாப் 5 சீரியல் Cineulagam

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan
