எரிவாயு விநியோகம்! ஜனாதிபதி முன்வைத்துள்ள யோசனை
எதிர்வரும் வருடத்திற்கான எல்.பி எரிவாயு விநியோக ஒப்பந்தத்தின் மொத்த விநியோகத்தில் 50 சதவீதத்தை தற்போதைய விநியோகஸ்தரிடம் இருந்து கொள்வனவு செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பான யோசனை ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டது.
லிட்ரோ எரிவாயு, லங்கா நிறுவனத்திற்கு 280,000 மெட்ரிக் தொன் எல்.பி எரிவாயு விநியோகிப்பதற்கான கால ஒப்பந்தம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
எல்.பி எரிவாயு விநியோகத்திற்கான ஏலம்
அதன்படி, 2024-2025 ஆம் ஆண்டுக்கான எல்.பி எரிவாயு விநியோகத்திற்கான ஏலம் கோரப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், லங்கா நிறுவனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், லிட்ரோ எரிவாயு, புதிய உடன்படிக்கைகளை மேற்கொள்வது மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு பாதகமாக அமையும் என கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நிறைவடையும் வரை தடையின்றி எல்.பி எரிவாயு விநியோகம் செய்வதற்கான யோசனையை ஜனாதிபதி முன்வைத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 47 நிமிடங்கள் முன்

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
