லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு விலை தொடர்பில் சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு
மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், புதிய எரிவாயு கையிருப்பு நாட்டிற்கு வந்தடைந்த நிலையில் மார்ச் இறுதி வரை விலையில் மாற்றம் இருக்காது என்று லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன அறிவித்துள்ளார்.
சமீபத்தில் ரூ.300 மட்டுமே விலை உயர்த்தப்பட்டதால், இந்த மாத இறுதி வரை எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் கூறியுள்ளார்.
தெஹ்ரானில் உச்சக்கட்ட பதற்றம்! அடுத்தடுத்து பதிவாகும் வெடிப்பு சத்தங்கள்: அதிரடி தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல்
விலை உயர்வு
இருப்பினும், விலை உயர்த்தப்பட்டாலும், அது குறிப்பிடத்தக்க உயர்வாக இருக்காது என்றும், புத்தாண்டை கருத்தில் கொண்டு ஏப்ரல் நடுப்பகுதி வரை தற்போதைய விலைகள் நீடிக்கக்கூடும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

33,000 மெட்ரிக் டொன் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு ஒரு கப்பல் மார்ச் 20 அன்று மாலைத்தீவை வந்தடைந்ததாகவும், அங்கிருந்து கொழும்பு வரும் சிறிய கப்பல்களில் மீண்டும் ஏற்றப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
நிச்சயமற்ற தன்மை
இதேவேளை, தற்போதைய நிலைமை கணிக்க முடியாததாகவும், நிலையற்றதாகவும் இருப்பதால், முன்னறிவிப்பை வழங்குவது சாத்தியமற்றது என்று லாஃப்ஸ் எரிவாயு (LAUGFS Gas) நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், பீதியால் நுகர்வோர் கூடுதலாக சிலிண்டர்களை வாங்கி வைப்பதனால் நெருக்கடி எற்படுவதாகவும், பொதுமக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறு அரசாங்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மத்திய தரைக்கடலில் ஆயிரக்கணக்கான வீரர்களுடன் இரகசியமாக நுழைந்த போர்க்கப்பல்! பேரழிவு ஏற்படலாமென எச்சரிக்கை
மருத்துவமனைக்கு வந்த நந்தினி, ரேணுகா பார்த்த ஷாக்கிங் விஷயம், கெஞ்சும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்காவிட்டால்.,ஈரானுக்கு 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப் News Lankasri
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam