எரிவாயு விநியோகம் அதிகரிக்கப்பட்டது! லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு
தினசரி எரிவாயு விநியோகம் 10ஆயிரம் சிலிண்டர்களால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
எரிவாயுவிற்கான நாளாந்த கேள்வி அதிகரித்துள்ளமையின் காரணமாக இவ்வாற எரிவாயு விநியோகம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
தினசரி எரிவாயு விநியோம் அதிகரிப்பு
இதன்படி, தினசரி எரிவாயு விநியோகம் 30 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரம் சிலிண்டர்கள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், எரிவாயு விநியோகத்தை அதிகரிக்க சப்புகஸ்கந்த மாபிம பிரதேசத்தில் புதிய எரிவாயு முனையம் ஒன்று உருவாக்கப்படவுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.