இலாப வருமானத்தை திறைசேரிக்கு செலுத்திய லிட்ரோ நிறுவனம்
மூன்று பில்லியன் ரூபாய் இலாப வருமானத்தை திறைசேரிக்கு செலுத்தியுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள லிட்ரோ நிறுவனத்தின் காரியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
லிட்ரோ நிறுவனத்தின் நிதி நெருக்கடி
பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டிருந்த லிட்ரோ நிறுவனம் தற்போது இலாபமடைந்துள்ளது.
2023ஆம் ஆண்டு காலப்பகுதியில் லிட்ரோ நிறுவனம் ஸ்ரீ லங்கா காப்புறுதி கூட்டுத்தாபனத்துக்கு 1.5 பில்லியன் ரூபாய் இலாப வருமானத்தை செலுத்தியுள்ளோம்.
தற்போது 1.5 பில்லியன் ரூபாய் இலாப வருமானத்தை ஸ்ரீ லங்கா காப்புறுதி கூட்டுத்தாபனம் ஊடாக திறைசேரிக்கு செலுத்தியுள்ளோம்.
லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக பதவியேற்கும்போது நிறுவனம் பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டிருந்தது. முறையான முகாமைத்துவம் மற்றும் ஊழியர்களின் ஒத்துழைப்பு ஆகியவற்றின் ஊடாக நிறுவனம் தற்போது இலாபமடைந்துள்ளது.
லிட்ரோ நிறுவனத்தின் எரிவாயு சிலிண்டரின் பாதுகாப்புத் தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
