மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இலங்கை வர அனுமதி! வெளியாகியுள்ள அறிவிப்பு
மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் இன்று நீக்கப்பட்டுள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் (சிஏஏ) தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.
கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவூதி அரேபியா, ஓமான், பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தடைவிதிக்கப்படுவதாக ஜூன் 28ம் திகதி அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு அந்த முடிவை இப்போது இரத்து செய்துள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.
சுகாதார அமைச்சகம் மற்றும் கோவிட் -19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட அறிவுறுத்தல்களின்படி குறித்த ஆறு நாடுகளில் வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நிபந்தனைகளுடன் இரத்து செய்யப்பட்டுள்ளது.
இதன்படி,
- வருகிற அனைத்து பயணிகளும் புறப்படுவதற்கு 96 மணி நேரத்திற்குள் எதிர்மறையான பி.சி.ஆர் சோதனை பெற்றிருக்க வேண்டும். பயணிகளில் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு விமான நிறுவனம் இதனை உறுதிப்படுத்த வேண்டும்.
- ஆன்டிஜென் சோதனைகளை போர்டிங் செய்வதற்கான புறப்படுவதற்கு முந்தைய சோதனையாக ஏற்றுக்கொள்ள முடியாது.
- பி.சி.ஆர் சோதனை அந்தந்த நாட்டில் உள்ள அரசு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனை / ஆய்வகத்திலிருந்து QR Code/Bar Code மூலம் வழங்கப்பட வேண்டும்.
- பயணிகள் முன்வைக்கும் சோதனை அறிக்கைகளின் நம்பகத்தன்மையை விமான நிறுவனங்கள் தங்களை திருப்திப்படுத்திக் கொள்ள வேண்டும்.
மீள் அறிவிப்பு வரும் வரை மேற்கண்ட நிபந்தனைகள் பொருந்தும் என்று சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் (சிஏஏ) தலைவர் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி......
வளை குடா நாடுகளில் இருந்து இலங்கை வர தடை! வெளியானது அறிவிப்பு

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 18 மணி நேரம் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
