இலங்கைக்கு விதித்த தடையை நீக்கியது ஐக்கிய அரபு இராச்சியம்
இலங்கை உள்ளிட்ட 15 நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த சுற்றுலா தடையை நாளை முதல் நீக்குவதாக ஐக்கிய அரபு இராச்சியம் அறிவித்துள்ளது.
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 15 நாடுகளுக்கு இந்த தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, முழுமையான தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட சுற்றுலாப் பயணிகளை பெங்கொக்கிற்குள் அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இந்த அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
சுற்றுலாத்துறையை மீள கட்டியெழுப்பும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும்,இதற்காக உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதி பெற்ற கொரோனா தடுப்பூசிகள் இரண்டு தடவையும் பெற்றிருத்தல் வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.