கால்நடைத் தீவனத் தயாரிப்பிற்காக நெல் மற்றும் அரிசியைப் பயன்படுத்துவதற்கான தடை நீக்கம்
கால்நடைத் தீவன உற்பத்திக்காக அரிசி அல்லது நெல்லைப் பயன்படுத்துவதைத் தடைசெய்து முன்னதாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டுள்ளது.
இது குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகாரசபை தற்போது வெளியிட்டுள்ளது.
உத்தரவு
அதன் பிரகாரம், அரிசி அல்லது நெல்லை கால்நடைத் தீவன உற்பத்திக்காக நேரடியாகப் பயன்படுத்துதல் அல்லது வேறு ஏதேனும் வகையில் கால்நடைத் தீவன உற்பத்திக்கான மூலப்பொருளாகப் பயன்படுத்துதல், விற்பனை செய்வதல், விற்பனைக்காக காட்சிப்படுத்துதல், களஞ்சியப்படுத்துதல், எடுத்துச் செல்லல, விநியோகித்தல் அல்லது கொள்வனவு செய்தல் போன்ற செயற்பாடுகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த அனுமதி உத்தரவு கடந்த ஜூன் 24ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நான் குட்டை உடை அணிந்த புகைப்படம் வெளியானதும் அவ்ளோ பிரச்சனை... சீரியல் நடிகை பரீனா ஆசாத் Cineulagam
பலமுறை ஏமாற்றப்பட்டேன், கடவுள் நீதி வழங்குவார் - கிரிக்கெட் வீரரின் வருங்கால மனைவி பதிவு News Lankasri
சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri