ஐ.எஸ் அமைப்பின் முன்னாள் உறுப்பினருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத ஆயுத குழுவின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு குழந்தை ஒன்றை கொலை செய்த குற்றத்துக்காக ஜேர்மன் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
குறித்த நபர் சிறுபான்மை சமய குழுவைச் சேர்ந்த 5 வயது பெண் குழந்தை ஒன்றையே இவ்வாறு கொலை செய்துள்ளார். இது முழுமையான இனப்படுகொலை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அத்துடன் கொல்லப்பட்ட குழந்தையின் தாயாருக்கு 57,000 அமெரிக்க டொலர்களை நஷ்ட ஈடாக வழங்க வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத குழு இனப்படுகொலைகளில் ஈடுபட்டமை சந்தேகம் இன்றி நிரூபிக்கப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.